ஆப்நகரம்

உஷார் மக்களே- நீலகிரி எச்சரிக்கை; 2வது முறை முரட்டுத்தனமா விரட்டும் வெள்ளம்!

இரண்டாவது முறை பைக்காரா அணை திறப்பால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Samayam Tamil 6 Sep 2019, 9:42 am
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத பெருமழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான இடங்களில் இருந்த மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil Pykara Dam


ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூழ்கி உள்ளன. பல இடங்களில் ஏற்பட்ட மண் சரிவால் போக்குவரத்து துண்டிக்கப் பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதை மட்டும் செஞ்சிட்டா? முதல்வருக்கு நானே பாராட்டு விழா நடத்துறேன் - ஸ்டாலின் அதிரடி!

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரியின் ஊட்டி, அவலாஞ்சி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக குந்தா, பைக்காரா, கிளன்மார்கன் அணைகளில் நிரம்பி வழிகின்றன.

அறம் சார்ந்த அறிவை கற்று தரும் ஆசிரியர்கள் தேவை - கமல்ஹாசன்

இவற்றில் இருந்து அதிகப்படியான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. பைக்காரா அணை முழுக் கொள்ளளவான 100 அடியை இன்று காலை எட்டியது. இதனால் கடந்த 30 நாட்களில் இரண்டாவது முறையாக பைக்காரா அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை எதிர்த்து மாபெரும் மக்கள் இயக்கம்- கே.எஸ்.அழகிரி அறிவிப்பு!

இதையொட்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் பைக்காரா அணைப் பகுதிகளில் வெள்ள நீர் கடல் போல் காட்சி அளிக்கிறது.

அடுத்த செய்தி