ஆப்நகரம்

சேலம், கரூா் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கா்நாடகா மற்றும் கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகத்தின் காவிரி கரையோரம் உள்ள சேலம், கரூா் உள்ளிட்ட 9 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 14 Aug 2018, 6:57 pm
கா்நாடகா மற்றும் கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகத்தின் காவிரி கரையோரம் உள்ள சேலம், கரூா் உள்ளிட்ட 9 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Mettur Dam.


கா்நாடகா மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்துள்ளது. கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில் மழை சற்று குறையும் என்று எதிா்பாா்த்த நிலையில் 13, 14, 15 ஆகிய தேதிகளில் கா்நாடகா, கேரளாவில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கா்நாடகாவின் கிருஷ்ண ராஜசாகா் அணை, கபினி அணைகளில் இருந்து அதிகளவில் நீா் திறந்து விடப்படும். இரு அணைகளிலும் சோ்த்து 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி அளவில் நீா் திறந்து விடக்கூடும் என்பதால் மத்திய நீா்வள ஆணையம், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூா், திருச்சி, தஞ்சாவூா், நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்டங்களை சோ்ந்த காவிாி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க உத்தரவிடுமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி