ஆப்நகரம்

பில்லூர் அணை நிரம்பியது: பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை!

கனமழை காரணமாக கோவை பில்லூர் அணையில் இருந்து 10,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டிருப்பதால், பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Aug 2018, 5:14 pm
கோவை: கனமழை காரணமாக கோவை பில்லூர் அணையில் இருந்து 10,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டிருப்பதால், பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil 7


பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியுள்ளது. இதனால் இரண்டாவது நாளாக 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. விநாடிக்கு 86,000 கனஅடி அணைக்கு நீர் வந்து கொண்டுள்ளது.

இதனால் பில்லூர் அணையின் கரையோர, பவானி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி