ஆப்நகரம்

பொங்கல் திருநாளில் கடுமையாக உயர்ந்த பூக்கள் விலை

பொங்கல் திருநாளில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

TNN 14 Jan 2017, 11:37 am
சென்னை: பொங்கல் திருநாளில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
Samayam Tamil flowers rate increased high on the pongal day due to demand
பொங்கல் திருநாளில் கடுமையாக உயர்ந்த பூக்கள் விலை


தமிழர் திருநாளாம் பொங்கல் விழா உலகத் தமிழர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு, சூரியனுக்கு நன்றி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் திருநாளை ஒட்டி, பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சந்தையில் மல்லிகைப்பூ கிலோ 1600 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 1,800 ரூபாய்க்கும், முல்லைப்பூ 1,800 ரூபாய்க்கும் கனகாம்பரம் 750 ரூபாய்க்கும் விற்பனையாகியது. இதேபோல், சம்பங்கி, ரோஜா, வாடாமல்லி உள்ளிட்ட அனைத்து பூக்களும் விலையேற்றத்துடன் காணப்படுகிறது.

மதுரையில் மல்லிகை கிலோ 1700 ரூபாய் வரையிலும், பிச்சி, முல்லை போன்றவை கிலோ 1200 ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ 1000 ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி கிலோ 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும், வெள்ளை செவ்வந்தி 100 ரூபாய்க்கும், கலர் செவ்வந்தி 150 ரூபாய்க்கும், சம்மங்கி கிலோ 200 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி, பூக்கள் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளது.

Flowers rate increased high on the Pongal Day due to demand.

அடுத்த செய்தி