ஆப்நகரம்

ரூ50.000 இரண்டு பிள்ளைகளை விற்ற தந்தை!

சிவகங்கையில் ரூ.50,000 இரண்டு குழந்தைகளை தந்தையே விற்ற துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.

Samayam Tamil 19 Apr 2018, 12:57 pm
சிவகங்கையில்ரூ.50,000 இரண்டு குழந்தைகளை தந்தையே விற்ற துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.
Samayam Tamil IMG-20180418-WA0047_(1)_16204


சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலைச் சேர்ந்தவர்கள், அங்குச்சாமி மற்றும் ஆனந்தகுமார்.அவரும் அவரது மகனும்சேர்ந்துஇளையான்குடி அருகே உள்ள விளங்குளம் கிராமத்தில் செம்மறி ஆடு கிடைவைத்து மேய்த்துவருகிறார்கள்.

இந்நிலையில் அங்குச்சாமி, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அம்மனிசத்திரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரைத்தொடர்புகொண்டிருக்கிறார். அவர் ஆடு மேய்க்க ஆட்கள் வேண்டும் என்று அவரிடம் கேட்டிருக்கிறார். அப்போது, 'தன்னிடம் இரண்டு பசங்க இருப்பதாகவும், ஆனால், முன் பணமாக ஐம்பதாயிரம் ரூபாய் தர வேண்டும் என்றும் ராஜேந்திரன் தொிவித்துள்ளாா். அங்குச்சாமியும் ஆனந்தகுமாரும் அவர் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு, இரண்டு பசங்களையும் வாங்கியிருக்கிறார்கள்.

கடந்த ஒரு மாத காலமாக இந்தச் சிறுவர்களுக்கு முறையாக சாப்பாடுகூடகொடுக்காமல், ஆட்டுக் கிடையில் படுக்க வைத்திருக்கிறார்கள். இந்தத்தகவலைஅறிந்த மாவட்ட ஆட்சியர் லதாவின் உத்தரவின் பேரில், சிவகங்கை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்புப் பணியாளர் சத்தியமூர்த்தி மற்றும் சைல்டுலைன் அமைப்பினர், இளையான்குடி போலீஸாரோடு சென்று, அந்தச் சிறுவர்களை மீட்டிருக்கிறார்கள்.

மேலும் பணத்துக்காக பெற்ற பிள்ளைகள் இரண்டு பேரை ஆடு மேய்க்க விற்பனைசெய்த தந்தையை போலீஸார் தேடிவருகின்றனர்.

அடுத்த செய்தி