ஆப்நகரம்

''இந்த ஆட்சி எவ்வளவு கேவலமானது என்பதை பாருங்கள்'' - அமைச்சரின் உளரல் மேனியா

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் புதுக்கூட்டத்தில் வழக்கம்போல உளறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 26 Jan 2021, 4:47 pm
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டங்களில் உளறி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. முன்னதாக ''நீட் தேர்வினை கொண்டு வந்தது மன்மோகன் சிங் ஆட்சி என்று கூறுவதற்கு பதிலாக முலாயன் சிங் ஆட்சியில் என்றும், பொங்கலுக்கு கொடுக்கும் ரூ. 2500 மீண்டும் டாஸ்மாக் மூலம் அரசுக்கே வந்து சேரும் என்றும், மாம்பழம் சின்னத்துக்கு பதிலாக பாமக வேட்பாளருக்கு ஆப்பிள் சின்னத்துக்கு வாக்களிமாரும் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Samayam Tamil file pic


மேலும், ஸ்டாலின் மகன் கருணாநிதி என்றும் பலமுறை மேடை பேச்சுக்களில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறி வருகிறார். அதனால், அதிமுகவினருக்கு பலமுறை தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், 'தமிழகத்தில் நடந்து வரும் ஆட்சி எவ்வளவு கேவலமானது என்று நீங்களே பாருங்கள்'' என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தற்போது பேசியது அதிமுகவினரை வேதனைடைய வைத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. அதிமுக சார்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது ஸ்டாலினை விமர்சித்தவர், திமுக என்பதை குறிப்பிடாமல், '' தயவு செய்து இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக போகிறது என்பதை பாருங்கள். எவ்வளவு அசிங்கமா போகிறதென்பதை சிந்தியுங்கள்'' என கூறி அங்கு மேடையில் அமர்ந்திருந்த அதிமுக நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். சிறிது நேரம் அவர்களின் முகத்தில் ஈ ஆடியதை காண முடிந்தது.

தேர்தல் வரும் சமயத்தில் ஆளும் கட்சியின் அமைச்சர் இப்படி உளறி வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால் இனிமேலாவது திண்டுக்கல் சீனிவாசன் கவனமாக பேசவேண்டும் என்றும் இல்லையெனில் பேசாமயே இருப்பது நல்லது என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி