ஆப்நகரம்

30 அடி ஆழ கிணறு; இப்படியொரு சிக்கலில் மாட்டிக் கொண்ட யானை!

கிணற்றில் தவறி விழுந்த யானையை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Samayam Tamil 19 Nov 2020, 1:28 pm
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கிராமம் ஏலகுண்டூர். இது பஞ்சபள்ளி சின்னாறு அணை அருகே அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு இன்று அதிகாலை பெண் யானை ஒன்று வந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றில் விழுந்துள்ளது. இதையடுத்து யானையின் பிளிறல் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. உடனே அப்பகுதி மக்கள் ஓடிவந்து பார்த்தனர். அப்போது 30 அடி ஆழ கிணற்றில் யானை விழுந்தது தெரியவந்தது.
Samayam Tamil Dharmapuri Elephant
File Photo


இதுபற்றி போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கயிறுகள் மூலம் யானையை கட்டி கிரேன் இயந்திரம் மூலம் இழுக்கும் முயற்சி நடைபெறுவதாக தெரிகிறது. தமிழகத்தில் தொடர்ச்சியாக யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

கோவை: விவசாயி பயிர்களைக் காக்க யானைக் கொலை!

அதுவும் கோவை வனப்பகுதியில் தான் உயிரிழப்புகள் அதிகம். இதுதொடர்பான ஆய்வில் மனிதர்கள் வாழும் இடங்களுக்கு யானைகள் உணவு தேடி வரும் போது தான் பிரச்சினைகள் எழுவதாக தெரிகிறது.

எனவே யானைகள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை வனப்பகுதியில் ஏற்படுத்தி தர வேண்டியது அவசியம். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது கட்டாயம்.

அடுத்த செய்தி