ஆப்நகரம்

பொங்கல் பரிசு தொகுப்பு: தமிழக அரசு பிறப்பித்த புதிய உத்தரவு!

பொங்கல் பரிசுத் தொகுப்பு மக்களுக்கு சரியாக சென்று சேர்கிறதா என்பதைக் கண்காணிக்க குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 4 Dec 2021, 10:57 am
பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் இருப்போருக்கும் வழங்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது. அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதை கண்காணிக்க குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது.
Samayam Tamil tn pongal gift


மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான இந்த குழுவில் கூட்டுறவு சங்க இணை பதிவாளர், மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஆகியோர் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை வழங்கப்பட உள்ளது.
பள்ளிகளுக்கு பறந்த அவசர உத்தரவு: மாணவர்கள் ஹேப்பி!
20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு 1088 கோடி ரூபாயும், கரும்பு வழங்குவதற்காக ரூ.71 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலாக்காய் 10 கிராம் மட்டுமே கூட்டுறவு சங்க பதிவாளர்கள் மூலம் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சுய உதவிக்குழு கடன் ரத்து: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
பரிசுப் பொருள்கள் சரியாக மக்களைச் சென்று சேர்கிறதா, ஏதேனும் குளறுபடி நடைபெறுகிறதா என்பதை இந்த குழு கண்காணிக்கும். அனைத்து மண்டல பதிவாளர், கூட்டுறவு சங்க பதிவாளர்கள் மூலம் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி