ஆப்நகரம்

மாஜி அமைச்சர் மணிகண்டன் கைது: பெங்களூரில் சிக்கினார்!

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.

Samayam Tamil 20 Jun 2021, 9:07 am
பெங்களூரில் பதுங்கியிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
Samayam Tamil manikandan


தமிழ்த் திரையுலகில் நாடோடிகள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் சாந்தினி தேவா. மலேசியாவைச் சேர்ந்த இவர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்தார்.
ஊரடங்கில் இத்தனை தளர்வுகளா? வெளியாகும் ‘நச்’ அறிவிப்பு!
கடந்த 5 வருடங்களாக தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு தற்போது திருமணம் செய்துகொள்ள மறுப்பதாகவும், 3 முறை மிரட்டி கருக்கலைப்பு செய்ததாகவும் உள்ளிட்ட குற்றசாட்டுகளை அவர் மணிகண்டனுக்கு எதிராக முன்வைத்தார்.

ஆனால் மணிகண்டனோ நடிகை சாந்தினியை எனக்கு தெரியாது என்றும் அவருக்கு பின்னால் பண மோசடியில் ஈடுபடும் கும்பல் உள்ளதென்றும் கூறியிருந்தார்.
பிடிஆர் பதவியை உருவும் ஸ்டாலின்? என்ன நடக்கிறது மேல் மட்டத்தில்?
இதனிடையே அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மணிகண்டனின் முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் அவரை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று பெங்களூரில் பதுங்கியிருந்த முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனை கைது செய்தனர்.

அடுத்த செய்தி