ஆப்நகரம்

ஓபிஎஸ்க்கு பெருகி வரும் மெஜாரிட்டி: முன்னாள் அமைச்சர் பொன்னுச்சாமியும் ஆதரவு

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக எதிர்ப்பு தெரிவித்து, பன்னீர்செல்வம் தனி ஆவர்த்தனம் செய்ய தொடங்கியுள்ளார்.

TNN 10 Feb 2017, 12:43 pm
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக எதிர்ப்பு தெரிவித்து, பன்னீர்செல்வம் தனி ஆவர்த்தனம் செய்ய தொடங்கியுள்ளார்.
Samayam Tamil former aiadmk minister ponnusamy joins ops
ஓபிஎஸ்க்கு பெருகி வரும் மெஜாரிட்டி: முன்னாள் அமைச்சர் பொன்னுச்சாமியும் ஆதரவு


அதிமுக பிரமுகர்கள் மட்டுமின்றி, பல்வேறு கட்சியினரும், பொதுமக்களும் நாள்தோறும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு நேரில் வந்து, ஆதரவு தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். அதேசமயம், நாளுக்கு நாள், சசிகலாவின் எதிர்ப்பை பன்னீர்செல்வம் அதிகரித்து வருவதால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் சசிகலா முதல்வராக பெருகி வரும் எதிர்ப்பை தொடர்ந்து நாளுக்கு நாள் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. நேற்று அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஓபிஎஸ்க்கு ஆதரவு கொடுத்தார். கே.மாணிக்கம், வி.சி.ஆறுகுட்டி. மனோரஞ்சிதம், நாகராஜ், மனோகரன், எஸ்.பி.சண்முகநாதன் ஆகிய 5 அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு கொடுத்துள்ள நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் பொன்னுசாமியும் இன்று ஓபிஎஸ்க்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.

இன்று ஓபிஎஸ் இல்லத்திற்கு சென்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஓபிஎஸ் ஒரு நல்ல மனிதர். தமிழகத்தை வழிநடத்த அவருக்கு திறமையும், தகுதியும் உள்ளது. சசிகலாவுக்கு ஆதரவாக இருக்கும் கிட்டத்தட்ட 130 எம்.எல்.ஏக்கள் விரைவில் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Former AIADMK minister Ponnusamy joins OPS

அடுத்த செய்தி