ஆப்நகரம்

பயமா, எங்களுக்கா? கெத்து காட்டும் செல்லூர் ராஜு

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.

Samayam Tamil 23 Oct 2021, 7:03 am
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகள், அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்து சோதனை நடத்திவருகின்றனர்.
Samayam Tamil sellur raj


எம்.ஆர்.விஜயபாஸ்கர். எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி. விஜயபாஸ்கர் ஆகியோரின் இடங்களிலும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும் லஞ்சஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ரொக்கப்பணம், நகைகள், சொகுசு கார் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமானவராக அறியப்படும் கூட்டுறவு இளங்கோ வீடு, அலுவலகங்களில் நேற்று சோதனை நடைபெற்றது.
நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு: அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!
கூட்டுறவு சங்கங்களில் நடைபெற்ற முறைகேட்டுக்கும் இளங்கோவுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. எனவே இந்த விவகாரத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த செல்லூர் ராஜு பெயரும் அடிபடுவதாக கூறுகிறார்கள்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் மதுரையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு மாஜி அமைச்சர்களின் வீடுகளில் நடைபெற்ற ரெய்டு குறித்து கருத்து தெரிவித்தார்.
தீபாவளி போனஸ்: ஆலோசனையில் முதல்வர் - அமைச்சர் சொன்ன தகவல்!
இதுகுறித்து பேசிய அவர் " கருணாநிதி காலத்திலேயே நாங்கள் எத்தனையோ சோதனைகளை சந்தித்துள்ளோம். எல்.கே.ஜி படிக்கும் போதே அச்சுறுத்தலை சந்தித்தோம். இப்போது அச்சுறுத்தலில் டபுள் டாக்டரேட் முடித்துவிட்டோம். எனவே எங்களுக்கு பயம் இல்லை." என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி