ஆப்நகரம்

ஈரோடு கிழக்கு: சட்டமன்றத் தேர்தலுக்கு அடித்தளம் - எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் சட்டமன்றத் தேர்தலுக்கு அடித்தளமாக அமையும் என முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 13 Feb 2023, 11:28 am
அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் முக்கிய அடித்தளமாக இருக்கும் என்றும் இன்றைக்கு சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறுவது உறுதி என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sp velumani


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரப்பன்சத்திரம், சாந்தான் காடு உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் வேலுமணி, பொன்னையன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் எஸ்பி. வேலுமணி, “குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்குவதாக தெரிவித்தனர். 21 மாதங்கள் ஆகியும் இதுவரை வழங்கவில்லை. ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் 21,000 கொடுத்திருக்க வேண்டும். சொத்து வரி பால் விலை உயர்வு என மக்கள் கடுமையாக பாதித்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு - மருமகனை அனுப்பிய ஸ்டாலின் - பின்னணியில் என்ன சாதி கணக்கு?

உறுதியாக கிழக்கு சட்டமன்ற தொகுதியில் எடப்பாடிக்காகவும், அம்மாவுக்காகவும் கண்டிப்பாக ஓட்டு போடுவதாக மக்கள் கூறுகின்றனர். அதிமுக ஆட்சி மூன்று மாதத்தில் போய்விடும் ஓராண்டுக்குள் போய்விடும் என கூறிவந்தனர். ஆனால் நான்கரை ஆண்டு காலம் ஆட்சி நடைபெற்றது.

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கூட எடப்பாடி பழனிசாமி வர வேண்டிய நிலையில் முதலமைச்சராக ஸ்டாலின் வந்து விட்டார். இந்த தொகுதியில் பணத்தை தண்ணியாக செலவு செய்து வருகிறார்கள். ஒரு வீதிக்கு நான்கு தேர்தல் ஆபீஸ் போட்டு உள்ளனர். தேர்தல் விதிமுறைகளை மீறி வருகின்றனர்.

எடப்பாடி அனுப்பிய தூது: அதிமுக வாக்கு வங்கியில் பெரிய ஓட்டை - எப்படியாவது சரி செய்யணும்!

இந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி உறுதி. அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முக்கிய அடித்தளமாக இந்த இடைத்தேர்தல் இருக்கும். இன்றைக்கு சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறுவார்” எனக் கூறினார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி