ஆப்நகரம்

“ஜெயலலிதா கொலை செய்யப்பட்டது உண்மை”! : ஜெ. தோழி கீதா பரபரப்பு குற்றச்சாட்டு!!

“ஜெயலலிதா கொலை செய்யப்பட்டது உண்மை”! : ஜெ. தோழி கீதா பரபரப்பு குற்றச்சாட்டு!!

TOI Contributor 8 Feb 2017, 3:54 pm
ஜெயலலிதா கொலை செய்யப்பட்டது உண்மை தான் என்றும், அவரது மரணம் குறித்து விசாரணைக்கமிஷன் அமைக்க இருப்பதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியிருப்பதை வரவேற்பதாகவும் ஜெயலலிதாவின் தோழி கீதா கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil former chief minister jayalalitha murdered says jayas friend geetha
“ஜெயலலிதா கொலை செய்யப்பட்டது உண்மை”! : ஜெ. தோழி கீதா பரபரப்பு குற்றச்சாட்டு!!


தமிழகத்தில் அசாதாரண அரசியல் சூழல் நிலவி வருகிறது. ஆளும் அதிமுக கட்சி இரண்டாக பிளவுபட்டு சசிகலா அணி, ஓ.பன்னீர் செல்வம் அணி என்று செயல்பட்டுவருகிறது. அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற சசிகலா அடுத்ததாக தமிழக முதல்வராக ஆயத்தமாகி வருகிறார். இந்நிலையில் தன்னை முதல்வர் பதவியில் இருந்து விலக சொல்லி சசிகலா குடும்பத்தினர் நிர்பந்தித்ததாக ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டினார். இன்று செய்தியாளர்களை சந்தித்த பன்னீர் செல்வம் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதால் அவற்றை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமையாகும். அதனால் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்றார்.

இந்த அறிவிப்புக்கு ஜெயலலிதாவின் தோழி கீதா வரவேற்பு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா கொலை செய்யப்பட்டது உண்மை தான் என்றும், இதை அப்போதிருந்து நான் வலியுறுத்தி வரும் நிலையில் முதல்வர் விசாரணை கமிஷன் அமைக்க முடிவெடுத்து இருப்பது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார். மேலும் சசிகலா எக்காலத்திலும் முதலமைச்சர் ஆகிவிடக்கூடாது என்றும் கீதா கூறினார்.

அடுத்த செய்தி