ஆப்நகரம்

வரும் 21ஆம் தேதி... நேரம் குறிச்ச ஓபிஎஸ்... அதிமுகவில் அடுத்த திட்டம் இதுதானாம்!

மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் உடன் ஓ.பன்னீர்செல்வம் வரும் 21ஆம் தேதி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

Authored byமகேஷ் பாபு | Samayam Tamil 18 Dec 2022, 7:30 am

ஹைலைட்ஸ்:

  • குஜராத் பயணத்திற்கு பின்னர் விறுவிறுவென வேலை செய்யும் ஓபிஎஸ்
  • வரும் 21ஆம் தேதி முக்கிய கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்
  • அதிமுக செயற்குழு, பொதுக்குழு தொடர்பாக முக்கிய முடிவெடுக்க வாய்ப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil OPS
அதிமுகவில் உட்கட்சி பூசல் தொடர் கதையாகி வருகிறது. எடப்பாடி பழனிசாமியா... ஓ.பன்னீர்செல்வமா... யாருக்கு தலைமை நாற்காலி? என்பதில் போட்டா போட்டி நிலவுகிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியும் வருகின்றனர். அந்த வகையில் வரும் 21ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் முக்கிய கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
குஜராத் பயணம்

இதில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். சமீபத்தில் குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வம் சென்றிருந்தார். அங்கு பாஜக மூத்த தலைவர்கள் சிலரை சந்தித்து பேசியதாக தெரிகிறது. இதில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை.
நிதானமில்லாமல் பேசிய சி.வி.சண்முகம்: பாஜக கண்டனம்!
ஓபிஎஸ் அதிருப்தி

முன்னதாக ஜி-20 மாநாடு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது ஓ.பன்னீர்செல்வம் தரப்பை அதிருப்தியில் ஆழ்த்தியது. உடனே மத்திய அரசுக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். எடப்பாடி பழனிசாமிக்கு அப்படியொரு பதவி எதுவும் கிடையாது.

தேர்தல் ஆணைய அங்கீகாரம்

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. தேர்தல் ஆணையமும் அங்கீகரிக்கவில்லை. என்னுடைய ஒருங்கிணைப்பாளர் பதவியை தான் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இனிமேல் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளர் என்று அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் குஜராத் பயணம் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒருவித நம்பிக்கையை அளித்திருக்கிறது.

அதிமுக கூட்டம்

டெல்லியின் அதிகார வட்டத்துடன் இருந்து வந்த அதிருப்தி முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் குஜராத் பயணத்திற்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் முதல் கூட்டம் என்பதால் டிசம்பர் 21ஆம் தேதி மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு அதிமுகவின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார். சென்னை வேப்பேரி ரிதர்ட்டன் சாலையில் உள்ள YMCA திருமண மண்டபத்தில் காலை 10 மணியளவில் கூட்டம் நடைபெறவுள்ளது.
வாட்ச் விலை.. அதிர வைத்த அண்ணாமலை; வாயடைத்து போன அரசியல் கட்சிகள்!
அடுத்தகட்ட திட்டம்

இதில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை இனியும் காலம் தாழ்த்தக் கூடாது. விரைவாக கட்சி பணிகளை முடுக்கிவிட வேண்டும். தனது பலத்தை நிரூபித்து அதிமுகவை கைப்பற்ற தேவையான அனைத்து விஷயங்களையும் செய்ய மேற்கொள்ள வேண்டும் எனத் தீவிரம் காட்டி வருகிறார்.

ஓபிஎஸ் வியூகம்

இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கூறுகையில், அதிமுகவில் ஓபிஎஸிற்கே இன்னும் அதிகாரம் இருக்கிறது. அவரது ஒருங்கிணைப்பாளர் பதவி இன்னும் காலாவதி ஆகவில்லை. தேர்தல் ஆணையம் தொடர்ந்து அங்கீகரித்து கொண்டு தான் இருக்கிறது. அவரது பதவிக்காலம் என்பது டிசம்பர் 2026 வரை உள்ளது எனக் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ஓபிஎஸின் வியூகம் எந்த அளவிற்கு எடுபடப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
எழுத்தாளர் பற்றி
மகேஷ் பாபு
செய்தி தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகம் என 8 ஆண்டுகள் அனுபவம். எளிய மக்களின் குரலாகவும், சமூக அவலங்களை சுட்டிக் காட்டும் வகையிலும் எழுதப் பிடிக்கும். அரசியல் செய்திகளை வழங்குவதில் தீராத ஆர்வம் உண்டு. சமயம் தமிழ் ஊடகத்தில் Senior Digital Content Producer ஆக பணியை தொடர்ந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி