ஆப்நகரம்

தொப்பிய வச்சா நீ என்ன எடுப்பா தெரிவயா? கலாய்த்த பெண் கவுன்சிலர்

ஆர்.கே.நகரில் வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கயிருக்கிறது. இதில் சசிகலா அணி தரப்பில் டிடிவி தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிடுகிறார்.

TNN 30 Mar 2017, 6:42 pm
ஆர்.கே.நகரில் வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கயிருக்கிறது. இதில் சசிகலா அணி தரப்பில் டிடிவி தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிடுகிறார். ஓ.பன்னீர்செல்வம் அணியில் மதுசூதனன் மின்கம்பம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர்களைத் தொடர்ந்து தீபா, மருதுகணேஷ், கங்கை அமரன் உள்பட பலர் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.
Samayam Tamil former councillor speaks open about ttv dinakaran in rknagar
தொப்பிய வச்சா நீ என்ன எடுப்பா தெரிவயா? கலாய்த்த பெண் கவுன்சிலர்


தற்போது கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தின் மூலம் ஓட்டு கேட்டு வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஆர்.கே.நகர் முன்னாள் கவுன்சிலர் கூறுகையில், சிஆர்.சரஸ்வதி, நாஞ்சில் சம்பத் மற்றும் டிடிவி தினகரனுக்கு சவால் விடும் வகையில் கூறியுள்ளார்.

சிஆர் சரஸ்வதி, நீ சினிமாவில் நடித்திருக்கலாம், பாக்யராஜ் உடன் நடித்திருக்கலாம் ஆனால் ஆர்.கே.நகர் தொகுதியில் எங்களிடம் நடிக்க முடியாது. நாஞ்சில் சம்பத் அப்போது ஒரு மாதிரியும், இப்போது ஒரு மாதிரியும் பேசி வருகிறார். இவர்களைத் தொடர்ந்து முக்கிய வேட்பாளரான டிடிவி தினகரனை வறு வறு என்று வறுத்தெடுத்துள்ளார் முன்னாள் கவுன்சிலர். உங்களிடம் எத்தனை எம்.எல்.ஏக்கள் வேணுமென்றாலும் இருக்கலாம், ஆனால், எங்களிடம் மக்களின் ஆதரவு இருக்கிறது. உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

ஆர்.கே.நகர் தொகுதியில் யார் ஜெயிப்பது என்று பார்க்கலாம். நீங்கள் ஜெயித்தால் நாங்கள் இந்த ஊரிலேயே இருக்கமாட்டோம். நாங்கள் ஜெயித்தால் நீங்கள் மன்னார்குடிக்கு ஓடி ஓடி விடவேண்டும் என்று சவாலா பேசியுள்ளார். இவரது பேச்சைக்கேட்ட அப்பகுதி மக்கள் இவருக்கு பாரட்டுக்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி