ஆப்நகரம்

திமுக முன்னாள் கவுன்சிலர் வெட்டிக் கொலை!

கூடுவாஞ்சேரியில் திமுக முன்னாள் கவுன்சிலர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்

Samayam Tamil 26 Nov 2018, 1:50 pm
கூடுவாஞ்சேரியில் திமுக முன்னாள் கவுன்சிலர் மோகனை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil murder


சென்னையை அடுத்துள்ள கூடுவாஞ்சேரி நந்தீஸ்வரர் காலணியைச் சேர்ந்தவர் மோகன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர் திமுகவில் இரண்டு முறை கவுன்சிலராக இருந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு மோகன் நந்தீஸ்வரர் காலணி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை மடக்கி வழிமறித்தனர். பின்னர், அவர்கள் கையில் கொண்டு வந்த பெரிய பெரிய அரிவாள், கத்தியால் மோகனை குத்தி படுகொலை செய்தனர். இந்த தாக்குதலில் மோகன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார், மோகன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த படுகொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திமுக முன்னாள் கவுன்சிலர் மோகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி