ஆப்நகரம்

அவசரச்சட்டப் பிரதியை அதிகாரப்பூர்வமாக வெளியிடாதது ஏன்?: முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன்

ஜல்லிக்கட்டுக்கான தமிழக அரசின் அவசரச்சட்டத்தின் பிரதியை அதிகாரப்பூர்வமாக வெளியிடாதது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது என்று முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் பேசியுள்ளார்.

TNN 23 Jan 2017, 6:28 pm
ஜல்லிக்கட்டுக்கான தமிழக அரசின் அவசரச்சட்டத்தின் பிரதியை அதிகாரப்பூர்வமாக வெளியிடாதது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது என்று முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் பேசியுள்ளார்.
Samayam Tamil former justice hariparanthaman questions mystery behind jallikattu ordinance
அவசரச்சட்டப் பிரதியை அதிகாரப்பூர்வமாக வெளியிடாதது ஏன்?: முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன்


ஜல்லிக்கட்டுக்கான அவசரச்சட்டத்தை நிரந்தரச் சட்டமாக நிறைவேற்றுவதற்காக, தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் இன்று மாலை கூடியது. இதில், ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்யும் அவசரச்சட்டத்தின் முன்முடிவு அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நேரத்தில், மெரினா கடற்கரையில் இருக்கும் போராட்டக்காரர்கள் மத்தியில் பேசிய முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்பட்டது எப்படி என்றும் தமிழக அரசின் அவசரச்சட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வு கிடைப்பது எவ்வாறு என்றும் விளக்கினார். ஆனால், ஜல்லிக்கட்டுக்கான அவசரச்சட்டத்தின் பிரதியை அரசே அதிகாரப்பூர்வமாக வெளியிடாதது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது என்றும் கூறினார்.

அவசரச்சட்டம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவர்களால் சனிக்கிழமையன்று பிறப்பிக்கப்பட்டது. நேற்று, அவசரச்சட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு விதித்துள்ள விதிமுறைகள் வெளியிடப்பட்டன. ஆனால், விலங்குகள் வதைத்தடுப்புச் சட்டத்தில் என்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அறிய, அவசரச்சட்டத்தின் பிரதி வெளியிடப்படவில்லை என்று ஹரிபரந்தாமன் தெரிவித்தார்.

அடுத்த செய்தி