ஆப்நகரம்

7 முறை எஸ்கேப்: 8வது முறை போட்டுத்தள்ளிய ரவுடிகும்பல்

ஏழு முறை கொலை முயற்சியில் இருந்து தப்பியவர் 8வது முறையாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 11 Apr 2017, 1:42 pm
ஏழு முறை கொலை முயற்சியில் இருந்து தப்பியவர் 8வது முறையாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil former local body president murdered in madurai
7 முறை எஸ்கேப்: 8வது முறை போட்டுத்தள்ளிய ரவுடிகும்பல்


சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி அருகேயுள்ள வேம்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் மதுரை மாவட்டம் கீழ் வடத்தூரில் காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் நேற்று வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

முருகன் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை வேம்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார். அப்போது 2010ம் ஆண்டில் இவரது தம்பி முத்துக்கிருஷ்ணனை, என்கவுண்டரில் கொல்லப்பட்ட புதுக்குளத்தைச் சேர்ந்த பிரபு தரப்பினர் கொலை செய்தனர். இதன் காரணமாக கருப்பு என்பவரை முருகன் தரப்பினர் கொன்றதாக கூறப்படுகிறது.

இந்த கொலை வழக்கில் பழிக்கு பழியாக முருகனை போட்டுத்தள்ள பிரபு தரப்பினர் முடிவு செய்துள்ளனர். 7 முறை பிரபு தரப்பினரின் கொலை முயற்சியிலிருந்து தப்பிய முருகன் 8வது முயற்சியில் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதிய அடக்குமுறை முருகன் எதிர்த்ததனால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று சமூக செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அடுத்த செய்தி