ஆப்நகரம்

பன்னீர்செல்வம் மனசாட்சி இல்லாமல் பேசுகிறார்: முன்னாள் அமைச்சர் வளர்மதி

பதவி விலகல் கடிதத்தை அளித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் மனசாட்சியில்லாமல் பேசுவதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வளர்மதி குற்றம்சாட்டியுள்ளார்.

TNN 9 Feb 2017, 1:51 pm
சென்னை: பதவி விலகல் கடிதத்தை அளித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் மனசாட்சியில்லாமல் பேசுவதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வளர்மதி குற்றம்சாட்டியுள்ளார்.
Samayam Tamil former minister valarmathi blames o panneerselvam for his reports about sasikala
பன்னீர்செல்வம் மனசாட்சி இல்லாமல் பேசுகிறார்: முன்னாள் அமைச்சர் வளர்மதி


அதிமுக பொதுசெயலாளர் வி.கே.சசிகலா அக்கட்சியின் சட்டப்பேரவைக்குழு தலைவராக தேர்வுசெய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கிறார். ஆனால், ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னைக்கு வராததால் இருப்பதால் அவரது பதவியேற்பு நிகழ்வு கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், ஆளுநர் மும்பையிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டுள்ளார். மாலையில் அவர் சென்னை வருவார் என்று தகவல் கிடைத்துள்ளது.

இச்சூழலில், செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர், ஓ.பன்னீர்செல்வம் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மனசாட்சியே இல்லாமல் பேசுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக முதல்வராக சசிகலா விரைவில் பதவியேற்பார், ஆளுநரை சந்திக்க அதிமுக சார்பில் நேரம் கேட்கப்பட்டள்ளது என்றும் அவர் கூறினார்.

அடுத்த செய்தி