ஆப்நகரம்

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!!

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை குறித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த வழக்கில் தமிழக போலீசார் விசாரித்து வந்தனர். இந்தக் கொலை தொடர்பாக திமுக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச்செயலாளர் சீனியம்மாளின் மகன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

Samayam Tamil 29 Jul 2019, 6:29 pm
திருநெல்வேலி மேயர் உமா மகேஸ்வரி கடந்த 23ஆம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவருடன் அவரது கணவர் முருகசங்கரன், வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் ஆகிய மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
Samayam Tamil CBCID 1


கடந்த ஒரு வாரமாக மர்ம முடிச்சு அவிழாத நிலையில் நேற்று இரவு திமுக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச்செயலாளர் சீனியம்மாளின் மகன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக செய்தி வெளியானது.

மதுரையில் இவரை போலீசார் கைது செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உமா மகேஸ்வரியின் வீடு அருகாமையில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் இந்தக் கொலையில் அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது காவல் துறையினருக்கு பெரும் சவாலாக இருந்தது.

இந்நிலையில் அப்பகுதியில் உமா மகேஸ்வரியின் வீட்டில் இருந்து சிறிது தொலைவில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து திமுக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச்செயலாளர் சீனியம்மாளிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டபோது மறுத்தார்.

மேயர் கொலை வழக்கு: திமுக பிரமுகரின் மகன் கைது!

தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்ததில் ஸ்கார்பியோ கார் ஒன்று மூன்று, நான்கு முறை உமா மகேஸ்வரி வீடு அருகே உலா வருவது பதிவாகி இருந்தது. இந்த கார் கடந்து சென்ற பின்னரே கொலை நடைபெற்றிருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விசாரணையை விரைவுபடுத்திய காவல் துறையினர், சீனியம்மாளின் மகனை அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். மேலும் இவர் அளித்த தகவலின் அடிப்படையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.

வேலூரில் இப்படியொரு குண்டைப் போட்ட உதயநிதி ஸ்டாலின்!

தற்போது இந்த விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆணவக் கொலை..தமிழக அரசின் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை- உயர் நீதிமன்றம்!

அடுத்த செய்தி