ஆப்நகரம்

நேற்று பாஜக, இன்று திமுக - சர்ச்சை பேச்சை நிஜமாகவே மாற்றிக் காட்டிய தலைவர்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜகவின் அரசகுமார் திடீரென்று திமுகவில் இன்று இணைந்துள்ளார்.

Samayam Tamil 5 Dec 2019, 11:45 am
புதுக்கோட்டையில் திமுக நிர்வாகியின் இல்ல திருமண விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநில துணைத் தலைவர் அரசக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய அரசக்குமார், ”ஸ்டாலின் நினைத்திருந்தால் கூவத்தூர் சம்பவத்தின் போதே முதலமைச்சர் ஆகியிருக்கலாம்.
Samayam Tamil Arasakumar


ஜனநாயகத்திற்காக அமைதியாக இருந்ததால் அப்படி எதுவும் செய்யவில்லை. காலம் வரும். தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் விரைவில் பொறுப்பேற்பார். எம்.ஜி.ஆர் எனக்கு மிகவும் பிடித்த தலைவர். அவருக்கு பிறகு நான் மிகவும் மதிக்கக்கூடிய தலைவர் ஸ்டாலின். இவர் அனைத்து கட்சிகளையும் மதித்து நடக்கிறார்.

3 ஆண்டுகள் கடந்தும் ஜெயலலிதா மரணத்தில் நீங்காத மர்மம்!

நேர்மையாக நடந்து கொள்கிறார். மக்களின் ஆதரவு ஸ்டாலினுக்கு நிறைய இருக்கிறது. இவர் உழைப்பால் உயர்ந்தவர். தமிழகத்தின் முதலமைச்சர் ஆவதற்கு அனைத்து தகுதிகளும் இருக்கின்றன என்று பரபரப்பாக பேசினார். இதற்கு பாஜகவில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

பாஜக தொண்டர்கள் அரசகுமாரின் உருவப் படங்களை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கிடையில் அரசகுமார் எந்த நேரத்திலும் திமுகவில் சேர வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. அதன்படி இன்று திமுகவின் தலைமை அலுவலகத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அரசகுமார் திமுகவில் இணைந்தார்.

நினைவில் நீங்காத ”புரட்சி தலைவி”க்கு இன்று 3ஆம் ஆண்டு நினைவு தினம்!

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அரசகுமார், ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்ததை பெருமையாக கருதுகிறேன். திமுக நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் பேசிய நிதர்சனமான உண்மைக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. வாழ்நாளில் கேட்டிராத வார்த்தைகளை கேட்க நேர்ந்தது.

என்னுடைய ஆதரவாளர்களின் வேண்டுகோளின் படி திமுகவில் இணைந்துள்ளேன். இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழப் போகிறது. தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய என்னுடைய பங்களிப்பை முழுமையாக இருக்கும்.

தொண்டர்கள் படைசூழ ஜெயலலிதா நினைவு தின பிரம்மாண்ட பேரணி!

என்னுடைய வெளியேற்றத்தை ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்த பாஜக தலைவர்கள் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இது நிரந்தரம் இல்லை என்று கூறினார்.

அடுத்த செய்தி