ஆப்நகரம்

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கைது?

அதிமுக., முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் முறைகேடான வகையில், வெளிநாட்டுக்கு பண பரிமாற்றம் செய்த புகாரில் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

TNN 17 Sep 2016, 6:55 pm
அதிமுக., முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் முறைகேடான வகையில், வெளிநாட்டுக்கு பண பரிமாற்றம் செய்த புகாரில் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil former tn minister natham viswanathan arrested
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கைது?


சென்னை எம்ஆர்சி., நகரில் உள்ள ராணி மெய்யம்மை அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து நத்தம் விஸ்வநாதனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரூ.200 கோடி வரை ஹாங்காங் நாட்டுக்கு அனுப்பியதாக, நத்தம் விஸ்வநாதன், அவரது மகன் அமர்நாத் மற்றும் மைத்துனர் கண்ணன் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்கும் தொடர்ந்துள்ளது.

வருமான வரிச் சோதனையின்போது, இதுதொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதன் அடிப்படையிலேயே தற்போது விசாரணை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதால், நத்தம் விஸ்வநாதன், அமர்நாத் மற்றும் கண்ணன் ஆகியோரை கைது செய்ய, அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி