ஆப்நகரம்

பூச்சிகள் நிறைந்த பதஞ்சலி ஓட்ஸ்! வாடிக்கையாளர் அதிர்ச்சி!!

பாபா ராம்தேவ்-இன் பதஞ்சலி ஓட்ஸ் பாக்கெட்டில் மாவு பூச்சிகள் இருந்த சம்பவம் வாடிக்கையாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Samayam Tamil 19 Sep 2018, 5:35 pm
பாபா ராம்தேவ்-இன் பதஞ்சலி ஓட்ஸ் பாக்கெட்டில் மாவு பூச்சிகள் இருந்த சம்பவம் வாடிக்கையாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Samayam Tamil patanjali oats


யோகா குரு பாபா ராம் தேவ், பதஞ்சலி எனும் பெயரில் பலசரக்கு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். ஆன்லைனிலும், தனித்தனியாக ஷோ ரூம்களை அமைத்தும் இந்தியா முழுவதும் இவருடைய பொருட்கள் பிரபலமாகியுள்ளது. இயற்கையான முறையில் பதஞ்சலி பொருட்கள் தயாரிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், பல இடங்களில் இவருடைய பொருட்கள் தரமற்றவை என்றும் காலாவதியானவை என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், பாபா ராம்தேவின் பதஞ்சலி ஓட்ஸ் பாக்கெட்டை வாடிக்கையாளர் ஒருவர் வாங்கியுள்ளார். இயற்கையான முறையில் தயாிரக்கப்பட்டது என்று நம்பி வாங்கிய வாடிக்கையார், அதை பிரித்து பார்த்த போது, ஓட்ஸ்சில் மாவு பூச்சிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, பதஞ்சலி வாடிக்கையாளர் சேவை மைய எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் செய்ய முயன்றார். ஆனால், பல முறை முயற்சித்தும் வாடிக்கையாளர் சேவை எண் பிஸியாகவே இருந்துள்ளது.

பின்னர், இந்த சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த வாடிக்கையாளர், பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். ஏற்கனேவ, பதஞ்சலி நிறுவனம் மீது காலவதி தேதியை தவறாக அச்சடித்த குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி