ஆப்நகரம்

கரூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து: 4 பேர் பலி

கரூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

TNN 19 May 2017, 6:05 pm
கரூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
Samayam Tamil four killed in car accident near karur
கரூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து: 4 பேர் பலி


கரூர் அருகே கார் தென்னிமலை நல்லியம்பாளையம் பகுதியில் கார் சென்று ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதியதில், கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் காரில் பயணம் செய்த 7 பேரில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்த தீயணைப்பு படையினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தில் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி