ஆப்நகரம்

கிருஷ்ணகிரியில் சற்று முன்பு நேர்ந்த விபத்து.. 2 பேர் பரிதாப பலி.!

இன்று கிருஷ்ணகிரி மற்றும் கோவையில் ஏற்பட்ட வெவ்வேறு சாலை விபத்துகளில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

Samayam Tamil 14 Dec 2019, 5:28 pm
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்களின் மீது எதிரே வந்த தனியார் பேருந்து மோதியதில் ஹரிகரன், முருகன் என்பவர்கள் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Samayam Tamil கிருஷ்ணகிரியில் சற்று முன்பு நேர்ந்த விபத்து.. 2 பேர் பரிதாப பலி.!


இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் இரு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் தனியார் பேருந்தை ஓட்டுனரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தல்: வியூகம் அமைக்க தொண்டர்களை அழைத்த ஸ்டாலின்

இன்றைய நாளில் கோவை மாவட்டம் காரமடை மேம்பாலத்தில் வேன் ஒன்று சென்றுகொண்டிருந்த போது தவறான பாதையில் வந்த பேருந்தின் மீது பலமாக மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் அந்த வேன் பேருந்துக்கு அடியில் சிக்கி அதில் பயணித்த 6 பேரில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த 4 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அடுத்த செய்தி