ஆப்நகரம்

பெற்றோர், இரு பிள்ளைகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை - திண்டுக்கல் சோகத்தின் அதிர்ச்சி பின்னணி!

திண்டுக்கல்லில் ஒரே குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 13 Dec 2019, 10:53 am
சமீப காலமாக குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளை அடிக்கடி காண முடிகிறது. இப்படிப்பட்ட சோகத்தின் பின்னணியை கண்டறிந்து அவற்றை களைந்தெறிய வேண்டும்.
Samayam Tamil Suicide


இந்நிலையில் திண்டுக்கல்லில் நடந்துள்ள அதிர்ச்சிகர சம்பவம் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாவட்டத்தின் கொடைரோடு ரயில் நிலையம் அருகே நான்கு பேரின் உடல் சிதறி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தமிழக அரசின் உத்தரவால் பேரறிவாளன் செம ஹேப்பி!

இதையடுத்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை ஏற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் போலீசார் ஆய்வு செய்த போது ஆதார் அட்டைகள், டைரி ஒன்றும் கிடைத்துள்ளது. அதிலிருந்த தகவல்களை சேகரித்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்கள் திருச்சி மாவட்டம் உறையூரைச் சேர்ந்த உத்தரபாரதி, சங்கீதா, அபினயஸ்ரீ, ஆகாஷ் ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் என்று தெரியவந்தது.

அம்மா உணவகத்துக்குப் போட்டியாக ரஜினி உணவகம்!

ஆனால் இவர்களின் உடல்களை சரியாக அடையாளம் காண முடியவில்லை. ஏனெனில் விபத்தில் உடல்கள் சிதறி மிகவும் சிதைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த ஒரு நபரின் பாக்கெட்டில் இருந்து ரயில் டிக்கெட்கள், பஸ் டிக்கெட்கள் கைப்பற்றப்பட்டன.

அவை இரு நாட்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து கொடைரோடு ரயில் நிலையத்திற்கு எடுக்கப்பட்டவை ஆகும். மேலும் கொடைரோட்டில் இருந்து கொடைக்கானலுக்கு பஸ் டிக்கெட்கள் எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

பிறந்தநாள் அதுவுமா ரஜினி செஞ்ச காரியத்த பாருங்க ஃப்ரண்ட்ஸ்!

இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். அதேசமயம் தற்கொலை செய்து கொண்ட நபர்கள் யார்? எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பதை பற்றி போலீசார் தொடர் விசாரணை நடத்தி கொண்டிருக்கின்றனர்.

அடுத்த செய்தி