ஆப்நகரம்

திருப்பூரில் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை

திருப்பூரில் கடன் தொல்லை காரணமாக விவசாய குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

Samayam Tamil 5 Aug 2018, 8:57 pm
திருப்பூரில் கடன் தொல்லை காரணமாக விவசாய குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
Samayam Tamil 045446_t


திருப்பூர் மாவட்டம் செட்டிதோட்டத்தை சேர்ந்த விவசாயி முத்துசாமி. இவர் குத்தகை நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். கடன் தொல்லை காரணமாக மனமுடைந்திருந்த இவர் குடும்பத்தினருடன் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

மகளையும் மகனையும் வீட்டில் தூக்கிட்டு பின் முத்துசாமியும், அவரது தாயும் வீட்டிற்கு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இதை அறிந்த வந்த போலீசார் நால்வரின் உடலையும் தாராபுரம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களின் தற்கொலையை அறிந்து வெளியூரிலிருந்து திரும்பிய முத்துசாமியின் மனைவி விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாமல் பல இடங்களில் கடன் வாங்கியதால் முத்துசாமி கவலையில் இருந்தார் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி