ஆப்நகரம்

சோழவந்தான் அருகே திருடப்பட்ட 4 ஐம்பொன் சிலைகள் மீட்பு!

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருடப்பட்ட ஒவ்வொரு ஐம்பொன் சிலையின் மதிப்பும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கூறியுள்ளார்.

Samayam Tamil 16 Oct 2018, 2:40 pm
Read in English: Four panchaloha idols stolen from TN temple found abandoned in village
Samayam Tamil சோழவந்தான் அருகே திருடப்பட்ட 4 ஐம்பொன் சிலைகள் மீட்பு!
சோழவந்தான் அருகே திருடப்பட்ட 4 ஐம்பொன் சிலைகள் மீட்பு!


மதுரை மாவட்டம், சோழவந்தான் பெருமாள் கோயிலில் திருடப்பட்ட ஒவ்வொரு ஐம்பொன் சிலையின் மதிப்பும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறையில் பிரசித்தி பெற்ற சித்திர ரத வல்லப பெருமாள் கோயில் உள்ளது. இங்கு இருந்த சுமார் 2 ஆயிரம் ஆண்டு பழமையான வல்லப பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி, சீனிவாசர் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் கடந்த 13-ம் தேதி நள்ளிரவில் கொள்ளை போனது.

இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போது, முகமூடி அணிந்த இருவர், கோயிலின் கதவை உடைத்து உள்ளே புகுந்து சிலைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் சமயநல்லூர் துணை சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் விசாரணையில் இறங்கினர்.

திருடப்பட்ட சிலை குறித்து தகவல் அளித்த விவசாயி கணேசன்!


இந்நிலையில், திருடப்பட்ட சிலைகள் திண்டுக்கல் மாவட்டம் கல்யாணிப்பட்டி என்ற இடத்தில் இருப்பதாகவிவசாயி கணேசன் என்பவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் 4 சிலைகளையும் மீட்டு சோழவந்தான் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்நிலையில் மீட்கப்பட்ட சிலைகளை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல், தென் மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், மதுரை எஸ்.பி.மணிவண்ணன் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கூறுகையில், திருடப்பட்ட ஒவ்வொரு சிலையின் மதிப்பும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். புலன் விசாரணையைத் தீவிரப்படுத்தியதால் பயந்து குற்றவாளிகள் சிலைகளை விட்டுச் சென்று இருக்கலாம். குற்றவாளிகளைப் பிடித்த பின் முழு விவரம் தெரியவரும்.

கோயில்களில் அதிக பாதுகாப்பு கருவிகளும்சிசிடிவி கேமராக்களும் வைத்திருப்பது அவசியம். குற்றவாளிகளை ஒருவாரத்துக்குள் பிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் சிலைகளைக் கண்டுபிடிக்க உதவிய கணேசனுக்கு உரிய சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி