ஆப்நகரம்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளைஞர் கொலை: 4 பேர் கைது!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 3 Jan 2019, 12:55 pm
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil WhatsApp Image 2019-01-03 at 11.19.38.


காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் கணபதிபுரம் செல்லியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (20). புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இவருக்கும், அதே பகுதிச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையில், தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறின் போது யுவராஜ் வெட்டிக்கொலை செய்யப்பட்டர்.

இந்த வழக்கு சம்பந்தமாக சேலையூர் போலீசார் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்(25), ராஜூ (25), லெனின் (27) மற்றும் முகேஷ் (24) ஆகிய 4 பேரை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி