ஆப்நகரம்

முதியவரிடம் செல்போன் திருடிய நான்கு பேர் கைது!

சென்னை: சென்னையில் முதியவரிடம் செல்போன் திருடிய சம்பவத்தில் போலீஸார் 4 பேரை கைது செய்தனர்.

Samayam Tamil 17 Oct 2018, 4:56 pm
சென்னை நெற்குன்றம் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஜெயபாண்டியன் (66 வயது). இவர் கடந்த திங்கள்கிழமை வளசரவாக்கம் மெஜஸ்டிக் காலனியில் உள்ள உறவினர் வீடுக்கு சென்று திரும்பிய போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், அவரிடம் முகவரி கேட்பதுபோல் வந்தனர். அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, அவர்களின் ஒருவர், திடீரென அவரின் செல்போனைப் திருடிச் சென்றார்.
Samayam Tamil 2


இந்நிலையில் பின்னால் அமர்ந்திருந்தவரின் கையைப் பிடித்த ஜெயபாண்டியன், 100 மீட்டர் தூரம் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டார். இதில் அவருக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து ஜெயபாண்டியன் போலீஸ்லில் புகார் அளித்தார். இதையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

அதில் அவர்களை அடையாளம் கண்ட போலீஸார், 4 பேரைக் கைது செய்தனர். சக்திவேல், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சிவா ஆகியோருடன் 12 ஆம் வகுப்பு மாணவர், 8ம் வகுப்பு மாணவர் ஒருவரையும் கைது செய்தனர். இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

அடுத்த செய்தி