ஆப்நகரம்

தமிழக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கிய பிரான்ஸ் பெண்; யார் இவர்? ஏன் இப்படி?

விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வெளிநாட்டை சேர்ந்த பெண் ஒருவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 15 Dec 2019, 10:42 am
தமிழகத்தில் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்காக வேட்புமனு தாக்கல் தொடங்கி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
Samayam Tamil Election


இதற்கிடையில் தேர்தல் பிரச்சாரமும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக, திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

நாளை கடைசி நாள்; மும்முரமாக வேலை செய்யும் தமிழக அரசியல் கட்சிகள்!

பல கிராமங்களில் தலைவர்களை போட்டியின்றி தேர்வு செய்யும் வகையில் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஆச்சரியப்படும் வகையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலராங்கியம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் மருதுபாண்டி என்பவருக்கு ஆதரவாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இவரது பெயர் ஜோ. இவரது பிரச்சார வாசகம் “Vote for Mama". மருதுபாண்டியை தான் இவர் மாமா என்று அழைக்கிறார். இந்த பிரச்சாரத்தை காண திருப்புவனம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் மேலராங்கியம் கிராமத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

குதூகலமாக ஓடிவரும் யானைகள்; மேட்டுப்பாளையம் புத்துணர்ச்சி முகாமில் சுவாரஸியம்!

இவருக்கு தமிழ் கலாச்சாரத்தின் மீது மிக்க மதிப்புண்டு. அதேசமயம் வீடு தேடி சென்று வாக்கு சேகரிக்கும் முறை தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நிறைவு பெறும் வகையில் இங்கேயே தங்கி வேலை பார்க்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி பேசிய மருதுபாண்டி, என்னுடைய அக்கா மகன் முனீஸின் தோழி தான் இந்த ஜோ. இவர் தமிழகத்திற்கு சுற்றுலா வந்துள்ளார். நமது பிரச்சார முறை மிகவும் பிடித்து போனதால் எங்கள் கிராமத்திலேயே தங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மழை எங்கெல்லாம் வெளுத்து வாங்கியிருக்கு தெரியுமா?

அடுத்த செய்தி