ஆப்நகரம்

உலக பராம்பரிய வார விழா; மாமல்லபுரத்திற்கு இலவச அனுமதி

பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுத்தும் வகையில், நவம்பர் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை, உலக பாரம்பரிய வாரம் கொண்டாப்படுகிறது.

TNN 20 Nov 2017, 9:57 am
பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுத்தும் வகையில், நவம்பர் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை, உலக பாரம்பரிய வாரம் கொண்டாப்படுகிறது.
Samayam Tamil free entry for mamallapuram shore temple
உலக பராம்பரிய வார விழா; மாமல்லபுரத்திற்கு இலவச அனுமதி


இதனையொட்டி, மாமல்லபுரம கடற்கரை கோயிலுள்ள கலங்கரை விளக்கம், ஐந்து ரதிம் உள்ளிட்ட புராதனச் சின்னங்களைப் பெtதுமக்கள் இலவசமாக பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் கடற்கரை கோயிலானது, யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரியம் நிறைந்த பொக்கிஷமாகும். இங்கு உள்ள சிற்பங்களையும் புராதனச் சின்னங்களைப் பார்ப்பதற்கும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கு 30 ரூபாயும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 500 ரூபாயும் கட்டணம் விதிக்கப்பட்டு வருகிறது.

தற்போது, உலகப் பாரம்பரிய வார விழா கொண்டாடப்படுவதால், நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிக சுற்றுலாப்பயணிகள் மாமல்லபுரம் வரலாற்றுச் சுவடுகளை பார்க்க இலவசமாக அனுமதி்தது தொல்லியல் துறை உத்தரவிட்டது. இதன் காரணமாக மாமல்லபுரத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் பெரிதும் மகிழ்ந்தனர்.

அடுத்த செய்தி