ஆப்நகரம்

இன்று இலவச அனுமதி; ஒருவாட்டி மாமல்லபுரம் போயிட்டு வந்திடுங்க!

மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட இன்று ஒருநாள் மட்டும் இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Nov 2019, 9:13 am
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மாமல்லபுரத்தில் ஏராளமான புராதனச் சின்னங்கள் காணப்படுகின்றன. அவற்றில் குடைவரைக் கோயில்கள், ஒற்றைக்கல் கோயில்கள், கட்டுமானக் கோயில்கள் உள்ளிட்டவை அடங்கும்.
Samayam Tamil Mahabalipuram


இவற்றை உலகப் பண்பாட்டுச் சின்னம் என்று யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இங்குள்ள சின்னங்களை இந்திய தொல்லியல் ஆய்வகம் பராமரித்து வருகிறது. பல்லவர் ஆட்சிக் காலத்தில் மாமல்லபுரம் முக்கிய துறைமுகமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.

சபரி மலை செல்ல 44 சிறப்பு ரயில்கள்: உடனே ரிசர்வ் பண்ணிக்கோங்க!

இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சீன அதிபர் ஷி ஜிங்பிங் மாமல்லபுரம் வருகை புரிந்ததை அடுத்து, மாமல்லபுரம் மீதான ஈர்ப்பு மக்களிடம் அதிகரித்தது.

தற்போது அதிகளவில் சுற்றுலா பயணிகள் சென்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நவம்பர் 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுகிறது.

ஆளுநரின் செயலாளர் திடீர் மாற்றம் : தமிழக அரசு அதிரடி

இது இந்தியாவில் உள்ள புராதன நினைவுச் சின்னங்களை பராமரித்து பாதுகாத்து வரும் தொல்லியல் துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயிலில் ஒரு வாரத்திற்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இந்த விழாவை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதனச் சின்னங்களை இன்று ஒருநாள் மட்டும் இலவசமாக கண்டு களிக்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

என்னது... இபிஎஸ் அரசை அதிசயம் என்பதா? -ரஜினியை கண்டித்த ஓபிஎஸ்!!

எனவே வாய்ப்பு உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, ஒருமுறை மாமல்லபுரம் சென்று மகிழ்ச்சியாக பொழுதைக் கண்டுகளித்துவிட்டு வாருங்கள்.

அடுத்த செய்தி