ஆப்நகரம்

தியாகிகள் ஓய்வூதியம் உயர்த்தி அறிவிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா தியாகிகள் ஓய்வூதியத்தை உயர்த்தி அறிவித்துள்ளார்.

TOI Contributor 15 Aug 2016, 10:32 am
முதலமைச்சர் ஜெயலலிதா தியாகிகள் ஓய்வூதியத்தை உயர்த்தி அறிவித்துள்ளார்.
Samayam Tamil freedom fighters pension increased
தியாகிகள் ஓய்வூதியம் உயர்த்தி அறிவிப்பு


70வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கொடியேற்றி உரையாற்றினார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓய்வூதியத்தை 11,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாயாக உயர்த்தி அறிவித்தார். அதே போன்று சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான வாரிசு ஓய்வூதியத்தை 5,000 ரூபாயில் இருந்து 6,000 ரூபாயாகவும் உயர்த்தி அறிவித்துள்ளார். மேலும் உயர்கல்வியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதை பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். உணவு தானிய உற்பத்தியில் கடந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகம் 1.30 மெட்ரிக் டன் உற்பத்தி செய்துள்ளது என்றார். அதனைத்தொடர்ந்து முதலமைச்சரின் மாநில இளைஞர்கள் விருது, அப்துல் கலாம் மற்றும் கல்பனா சாவ்லா பெயரிலான விருதுகளை முதல்வர் வழங்கினார்.

அடுத்த செய்தி