ஆப்நகரம்

2015 முதல் 3000 ஈழத்தமிழ் அகதிகள் இலங்கை திரும்பியுள்ளனர்: தமிழக அரசு

தமிழக அரசு வெளியிட்டுள்ள கொள்கை குறிப்பில் இந்தியாவில் போரின் காரணமாக தங்கியுள்ள ஈழத்தமிழ் அகதிகளில் 3000 த்திற்கும் மேற்பட்டோர் இலங்கைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 8 Jul 2018, 11:30 pm
தமிழக அரசு வெளியிட்டுள்ள கொள்கை குறிப்பில் இந்தியாவில் போரின் காரணமாக தங்கியுள்ள ஈழத்தமிழ் அகதிகளில் 3000 த்திற்கும் மேற்பட்டோர் இலங்கைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil refugees
3000 தமிழ் அகதிகள் இலங்கைக்கு திரும்பியுள்ளனர்: தமிழக அரசு


2015ம் ஆண்டு முதல் நாடு திரும்பிய அகதிகளை குறிக்கும் இந்த எண்ணிக்கையில் அதிகபட்சமாக கடந்த ஆண்டு 1520 அகதிகள் இலங்கைக்கு திரும்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மே வரை 557 அகதிகள் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளனர்.

அந்த கொள்கை குறிப்பின் படி, 1984ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இன வன்முறைகளை தொடர்ந்து 3.04 லட்சம் அகதிகள் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.

கடந்த மே 1, 2018 வரையிலான கணக்குப்படி, 24 மாவட்டங்களில் உள்ள 107 முகாம்களில் 61,422 அகதிகள் வசித்து வருகின்றனர். 35, 316 அகதிகள் முகாம்களுக்கு வெளியே தங்கியுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி