ஆப்நகரம்

ஹோம்லெஸ் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தமிழக சிறுவர்கள்

ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவில் நடைபெறும் வீடற்றவர்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தமிழகத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் தகுதிபெற்றுள்ளனர்.

TOI Contributor 29 Jun 2016, 3:09 pm
சென்னை: ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவில் நடைபெறும் வீடற்றவர்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தமிழகத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் தகுதிபெற்றுள்ளனர்.
Samayam Tamil from chennai slum to global football stadium
ஹோம்லெஸ் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தமிழக சிறுவர்கள்


சென்னை எழும்பூர் வால் டேக்ஸ் சாலையில் உள்ள குடிசைப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி சங்கீதா. இவர் சிறுவயது முதலே கால்பந்து விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். எப்போதும் தனது நண்பர்களுடன் ஏதாவது ஒரு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருப்பார். தனது குடிகார தந்தையால் ஆதரவற்ற நிலையில் விடப்பட்டவர். இவரது தாய்க்கு சமீபத்தில் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், வேலையின்றி வறுமையில் வாடி வருகின்றனர்.

இவர் குடும்ப சூழல் காரணமாக 9ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டார். வீதியில் வாடும் குழந்தைகள் மற்றும் வேலைசெய்யும் குழந்தைகளுக்கான கருணாலயா என்ற தன்னார்வ தொண்டு அமைப்பின் மூலம் கால்பந்து பயிற்சிக்கான முகாம் குறித்து அறிந்துள்ளார். பின்னர் அவர்களின் உதவியுடன் பயிற்சி முகாமில் சேர்ந்து, தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால், ஸ்காட்லாந்தின் நாட்டின் கிளாஸ்கோவில் நடைபெறும் ஹோம்லெஸ் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இது தனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்றும், இதனை சரியாக பயன்படுத்தி கொள்வதே ஒரே குறிக்கோள் என்றும் சிறுமி சங்கீதா தெரிவித்துள்ளார். இந்தியாவில் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 20 பேரில், தானும் ஒருவர் என்பதை அப்பகுதி மக்கள் கொண்டாடி மகிழ்வதாகவும், தனக்காக ஒரு பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் மயிலாப்பூரைச் சேர்ந்த சாய்ராம் என்ற மாணவரும், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த பிரபாகர் என்ற மாணவரும் ஹோம்லெஸ் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

அடுத்த செய்தி