ஆப்நகரம்

எம்ஜிஆருக்கு எதிராக செயல்படும் ஓபிஎஸ்? உச்ச நீதிமன்றம் சென்ற இபிஎஸ்!

எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 1 Jul 2022, 6:12 pm
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் 378 பக்கங்கள் கொண்ட மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பெஞ்சமின், நத்தம் விஸ்வநாதன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தனித்தனியே கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
Samayam Tamil ops eps conflict


ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த கேவியட் மனுவில், “அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் 23 தீர்மானங்களை நிறைவேற்றக் கூறியும் அதனை கூட்டத்தில் செயல்படுத்தாமல் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பாகும். அதனால் இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யாரேனும் மேல்முறையீடு செய்தால், எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்தவித உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்த மனுவில் அதிமுகவின் நிறுவனரான எம்ஜிஆரின் நோக்கத்துக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் செயல்படுவதாகவும், அதிமுக எதற்காக தொடங்கப்பட்டது என்ற அடிப்படை நோக்கத்துக்கு எதிராக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் கதவை தட்டிய ஓபிஎஸ்: டீலா நோ டீலா?

பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுடனான கூட்டம், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆகியவற்றில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமை தான் வேண்டும் என கோரிக்கை வைத்தனர். உச்ச பதவியில் இருவர் இருக்கும் போது மாவட்டங்களுக்கு தனித்தனியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டால் வரவேற்பு செலவுகள் அதிகமாவதாக மாவட்டச் செயலாளர்கள் கூறியதாகவும் எனவே ஒற்றைத் தலைமையே வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள், செயற்குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கூறினர் என்றும் அதுவே பொதுக்குழு கூட்டத்தில் பிரதிபலிக்கப்பட்டதாகவும் இபிஎஸ் தரப்பு மனுவில் கூறப்பட்டுள்ளது.

உதயநிதிக்கு அமைச்சர் பதவி? ஸ்டாலின் கேட்டு வாங்கிய ரிப்போர்ட்!

மேலும் இரண்டு நீதிபதி அடங்கிய அமர்வு அதிமுக உரிமைக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஏதேனும் உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தால் தங்களது தரப்பு விளக்கத்தையும் கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அடுத்த செய்தி