ஆப்நகரம்

தமிழகத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

நாடு முழுவதும் பொது முடக்கம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 29 Jun 2020, 9:09 pm
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஐந்தாம் கட்டமாக வருகிற 30ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், UNLOCK1.0 என்ற பெயரில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு வழிகாட்டுதலின் இதனை பின்பற்றி வரும் மாநிலங்கள், தங்களுக்கு ஏற்றவாறு தளர்வுகளை அளித்து வருகிறது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


நாடு முழுவதுமான பொது முடக்கம் நாளையுடன் முடிவடையும் நிலையில், தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ குழுவினர், ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை. ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல. அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை. எப்போதும் பொது முடக்கத்தை நிரந்தரமாக்கி கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சிப்பது சரியான நடவடிக்கையாக இருக்காது என்றனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் ஜுன் 30ஆம் தேதி முடிவடைய உள்ள ஊரடங்கு உத்தரவு வருகிற ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் மேலும் நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஸ்லீப்பிங் மோடில் இருக்கும் ரஜினியின் சிஸ்டம்!

அத்துடன், பெரு நகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மற்றும் மதுரையின் சில பகுதிகளில் 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கானது வருகிற ஜூலை மாதம் 5ஆம் தேதி வரை அப்படியே அமலில் இருக்கும்.

தமிழக அரசு உத்தரவு


தமிழக அரசு உத்தரவு


மேற்கண்ட பகுதிகளில் ஜூலை 6ஆம் தேதிக்கு பின்னர், கடந்த 19ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையின் படி, அதாவது 19ஆம் தேதிக்கு முன்னர் இருந்த தளர்வுகளுடன் பொது முடக்கமானது வருகிற ஜூலை 31ஆம் தேதி வரை அப்பகுதிகளிலும் நீடிக்கும் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் 5,12, 19, 26 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நகர்புற வழிபாட்டு தலங்கள், பெரிய வழிபாட்டு தலங்கள், சுற்றுலாத் தலங்கள், வனிக வளாகங்கள், ஹோட்டல்கள், பள்ளி, கல்லூரிகள், மெட்ரோ ரயில், மின்சார ரயில்கள், திரையரங்குகள், உடற்பயிற்ச்சி கூடங்கள், அனைத்து வகையான கூட்டங்கள், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து இயங்களுக்கான தடை தொடந்து அமலில் இருக்கும்.

அடுத்த செய்தி