ஆப்நகரம்

கஜா புயலால் வாழ்வாதாரம் இழந்த மேலும் ஒரு விவசாயி தற்கொலை! தொடரும் சோகம்!!

கஜா புயல் பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்து தஞ்சையில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 2 Dec 2018, 5:11 pm
கஜா புயல் பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்து தஞ்சையில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil farmer suicide


கடந்த மாதம் 16ம் தேதி கஜா புயல் தமிழகத்தை சூறையாடியது. புயல் பாதித்து 17 நாட்கள் கடந்த நிலையிலும், அதன் விளைவு அதிகமாகவே உள்ளது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள், தற்கொலை செய்து கொள்ளும் அவலம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

கடந்தவாரம் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த விவசாயி திருச்செல்வம்(45). இவர் தனக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலத்தில் கடன் வாங்கி தென்னை மற்றும் தேக்கு மரங்களை சாகுபடி செய்திருந்தார். கஜா புயலின் கோர தாண்டவத்தால் விவசாயி திருசெல்வத்தின் தோப்பில் இருந்த தென்னை மரங்களும் தேக்கு மரங்களும் அடியோடு முறிந்து விழுந்தன. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், கடந்த சனிக்கிழமை நெல்லுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த துயரச்சம்பவம் முடிந்து சில நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள்ளாக தஞ்சையில் வாழ்வாதாரத்தை இழந்த மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். தஞ்சை மாவட்டம் சோழகிரிபட்டியைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவர் தனது தோட்டத்தில் இரண்டு ஏக்கர் கரும்பு பயிரிட்டிருந்தார். கஜா புயல் காரணமாக கரும்பு தோட்டம் முழுவதும் பாழாய்ப் போனது. இதனால் மனமுடைந்த சாமிக்கண்ணு கரும்பு தோட்டத்திலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுக்க வேண்டும், விவசாயிகள் தற்கொலை அரசு தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி