ஆப்நகரம்

கஜா புயலால் பாதித்த படகுகளுக்கான நிவாரணத் தொகை அதிகரித்து முதல்வர் உத்தரவு!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட படகுகளுக்கான நிவாரணத் தொகையை அதிகரித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Samayam Tamil 4 Jan 2019, 12:54 pm
கஜா புயலால் பாதிக்கப்பட்ட படகுகளுக்கான நிவாரணத் தொகையை அதிகரித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil aja


கஜா புயல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத பேரிழப்பை ஏற்படுத்தியது. தென்னை மரங்கள், வயல் வெளிகள் என பச்சை பசேலாக காட்சியளித்த இடங்கள் பாலைவனங்களாக மாறியுள்ளன. ஆயிரகணக்கான மக்கள் வீடு, உடமைகளை இழந்து உணவு, உடை, குடிநீர், மின்சார வசதியின்றி நிவாரண முகாம்களில் தவித்தனர்.

இதேபோல் நாகப்பட்டினம், வேதாரண்யம் போன்ற கடலோர மாவட்டங்களிலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை கஜா புயல் முற்றிலும் கேள்விக்குறியாக்கி உள்ளது. கஜா பாதித்த பகுதி மக்களுக்கு பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர். இன்னமும், செய்து வருகின்றனர். தமிழக அரசு சார்பிலும் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட படகுகளுக்கான நிவாரணத் தொகை ஏற்கனவே ரூ.85 ஆயிரம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த தொகையை ரூ.1.5 லட்சமாக உயர்த்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக திருவாரூர் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பெயர் இன்று அறிவிக்கப்பட இருந்தது. ஆனால், தேர்தலை தள்ளிவைக்கும் வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது.

இதையடுத்து, அதிமுக சார்பில் இன்று நடக்கயிருந்த ஆட்சிமன்றக் கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், திமுக, அமமுக ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பெயரை இன்று அறிவிக்க இருக்கின்றனர். அதே போன்று அதிமுகவும் தங்களது வேட்பாளர் பெயரை அறிவிக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி