ஆப்நகரம்

Gaja Cyclone: கொடைக்கானல் மண்சரிவில் சிக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

கஜா புயலின் பாதிப்பால் கொடைக்கானல் சின்னப்பள்ளம் பகுதியில் மண் சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு!

Samayam Tamil 17 Nov 2018, 2:40 pm
கஜா புயலின் பாதிப்பால் கொடைக்கானல், சின்னப்பள்ளம் பகுதியில் மண் சரிவில் சிக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil cats
Gaja Cyclone: மண்சரிவில் சிக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு!


சேலம் மாவட்டம் ஜாகீர் அம்மா பாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் ரவி(50), ராஜேந்திரன், சவுந்தரராஜன்(40), கார்த்திக்(21). இவர்கள் கொடைக்கானலில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள சின்னப்பள்ளத்தில் கட்டுமானத் தொழில் செய்வதற்காக, இரு நாட்களுக்கு முன் வந்தனர். இவர்கள் கட்டுமானம் செய்யும் இடத்தருகே தகரசெட் அமைத்து குடியிருந்தனர்.

இந்நிலையில், கஜா புயல் காரணமாக இப்பகுதியில் பெய்த கனத்த மழையால், இன்று காலை மண்சரிவு ஏற்பட்டு, அவர்கள் தங்கியிருந்த வீடு மண்ணில் புதைந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

ஆனால், போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டிருந்ததால், போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் 10 கி.மீட்டர் துாரம் நடந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

வீடு பாதிக்கும் மேல் மண்ணில் புதைந்ததால் அருகில் உள்ள பகுதியில் மண்ணை தோண்டி வீட்டுக்குள் இருந்தவர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு, கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் வெளிமாவட்ட கட்டிடத் தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி