ஆப்நகரம்

Cyclone Gaja: 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

தமிழக எல்லையை கடந்து கேரளாவுக்குள் கஜா புயல் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

Samayam Tamil 16 Nov 2018, 3:14 pm

கஜா புயல் கரையை கடந்த நிலையில், திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளதாகவும், இதனால் திண்டுக்கல்லில் 60-70 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil go


கடந்த ஒரு வாரமாக மிரட்டி வந்த கஜா புயல் இன்று அதிகாலை நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது.
Gaja Cyclone Live: கஜா புயல் பாதிப்பால் பலியானவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ. 10 லட்சம் அறிவிப்பு!
இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

‘கஜா புயலின் காரணமக இதுவரை நெய்வேலியில் 14 செ.மீ மழையும், விருதாச்சலம் மற்றும்செங்கல்பட்டில் 12 செ.மீ மழையும், சென்னை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. தாம்பரத்தில் 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல், கரூர். திருப்பூர், மதுரை, தேனி, திருச்சி ஆகிய இடங்களில் மிக கனமழையும், ஈரோடு தர்மபுரி சேலம் பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

காலை 7 மணி நிலவரப்படி 23 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்தது. தற்போது புயல் கடலில் இருந்து கரைக்கு வந்து திண்டுகல்லில் மையம் கொண்டுள்ளது. கஜா புயலானது நாளை அரபிக்கடலில் சென்றடையும்.

புயலின் காரணமாக இன்றும் நாளையும் மழை பெய்யும். அதிராமபட்டினத்தில் காற்றின் வேகம் 110 கிலோமீட்டராக பதிவாகி உள்ளது. கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் குறைந்துள்ளது .

புயல் கரையை கடந்த பகுதியான நாகை மற்றும் வேதாரண்யத்தில் காற்றின் வேகம் குறைந்துள்ளது. கடலோரா மாவட்டங்களில் மழை இருக்காது.

திண்டுகல்லில் மையம் கொண்டுள்ள புயல் அடுத்த மூன்று மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பிறகு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அரபிக்கடலில் சேரும்’’.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் கஜா புயல் மையம் கொண்டுள்ள கொடைக்கானலில் 100 க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன

அடுத்த செய்தி