ஆப்நகரம்

Cyclone Warning: வேகம் குறைந்த கஜா புயல் : நாளை மாலை கரையை கடக்கும்!

புதுடெல்லி : வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள கஜா புயல், நாளை மாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 14 Nov 2018, 10:01 am
இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கடக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடையும். இன்று காலை 5.30 மணி முதல் மணிக்கு 6 கி.மீ., வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது.
Samayam Tamil 2


மேற்கு, தென்மேற்கு நோக்கி நகரும் கஜா புயல் நாளை மாலை பாம்பன், கடலூர் இடையே கரையை கடக்கும். சென்னைக்கு 540 கி.மீ., தொலைவிலும், நாகைக்கு 640 கி.மீ., தொலைவிலும் கஜா புயல் உள்ளது.

மணிக்கு 80-90 கிமீ வேகத்தில் வீசும் இந்த புயல், கரையைக் கடக்கும் போது, சுமார் 100 கி.மீ வேகத்தில் வீசும் என கூறப்படுகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு, தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவை புயல் தாக்கக்கூடியப் பகுதிகளில் பணியமர்த்தியுள்ளது.

இந்நிலையில், கஜா புயலின் வேகம் 8 கி.மீ என்பதிலிருந்து 6 கி.மீ ஆக குறைந்துள்ளது. இதனால், புயல் தாக்க கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும் என கூறப்படுகிறது. தற்போது கஜா புயல் சென்னையிலிருந்து 570 கி.மீ தொலைவிலும், நாகையிலிருந்து 670 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இதனால், இன்று தமிழகத்தின் கடலோர பகுதிகள், ஆந்திராவின் தெற்கு கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும். காற்றின் வேகம் 90 முதல் 100 கி.மீ., ஆக இருக்கும். மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்.

நாளை மாலை புயல் கரையை கடக்கும். இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் அதிதீவிர கனமழை பெய்யக் கூடும். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி