ஆப்நகரம்

63 ஆயிரம் ஏக்கர் நிலம், 43 லட்சம் மரங்களை நாசம் செய்த கஜா புயல்!

தமிழகத்தில் கஜா புயல் கோரத்தாண்டவத்தால் 62 ஆயிரத்து 510 ஏக்கர் விவசாய நிலம் சேதமடைந்துள்ளதாகவும், 43 லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது .

Samayam Tamil 20 Nov 2018, 2:17 pm
தமிழகத்தில் கஜா புயல் கோரத்தாண்டவத்தால் 62 ஆயிரத்து 510 ஏக்கர் விவசாய நிலம் சேதமடைந்துள்ளதாகவும்,43 லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது .
Samayam Tamil TY20GAJACOCONUTTAN


கஜா புயலால் தென்னை மரங்களை இழந்த விவசாயிகளுக்கு, நிரந்தர தீர்வைதமிழ்நாடு வேளான்மை பல்கலைகழகம் தருவதாக தெரிவித்துள்ளது.

தமிகழகத்திற்கேஉணவளித்த டெல்டா தற்போது கஜா புயலால் நிலைகுலைந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம்,புதுக்கோட்டையை சேர்ந்த 45 வயதான சத்தியமூர்த்தி 7 ஏக்கரில் தென்னை தோப்பு வைத்துள்ளார். கஜா புயலுக்கு பிறகு ஒரு மரம்கூட மிஞ்சவில்லை என்று கூறியுள்ளார். ‘எல்லாம் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஒரே நாள் இரவில் வாழ்க்கை இப்படி மாறும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை’ என்று விவசாயி சத்தியமூர்த்தி வேதனைபட தெரிவித்தார் ‘’.

கஜா புயல் பல தென்னை விவசாயிகளின் வாழ்க்கையை நிலைகுலைய வைத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்அண்ணாதுரை தெரிவித்த தகவலின்படி, 43 லட்ச மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில் டெல்டா பகுதிகளில் மழை பெய்தால், விவசாயமே அழியும் நிலை ஏற்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்தென்னை விவசாயிகளின் பிரசன்னையை தீர்க்கதமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், எல்லா விவசாயிகளுக்கும் தென்னை மரக்கன்றுகள் கொடுக்க உள்ளனர். பொள்ளாசியில் உள்ள ஆழியாறில் தமிழ்நாடு வேளான்மை பல்கலைகழத்தின் நர்சரி உள்ளது. இங்கே அதிகளவிலான தென்னை மரக்கன்றுகள் தயாரிக்க முடிவெடுக்கப்பட்டிள்ளது.

அதேபோல் தஞ்சாவூரில் உள்ள வேப்பன்குளத்தில்தமிழ்நாடு வேளான்மை பல்கலைகழகம் ஆராய்ச்சிகூடம் உள்ளது. அதில் விஎச்சி 1, விஎச்சி 2, விஎச்சி 3 என்ற நெட்டை மரங்களின் கலப்பின மரக்கன்றுகள் உருவாக்கப்படுகிறது. இந்த கன்றுகள் டெல்டா பகுதியில் விளைவதுபோன்ற வகைகள் என்றுதமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் டீன்தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் ‘கஜா புயலின்போது தப்பித்த பழமை வாய்ந்த மரங்களில்இருந்து மரக்கன்றுகள் தயாரிக்கவேண்டும். புயலின் பாதிப்புகளிலிருந்து மக்கள் முழுவதுமாக மீண்ட பிறகே, மரக்கன்றுகளை வழங்கும் பணிகள் தொடரும் என்று கூறினார்.

இதுவரை புயலின் பாதிப்பால் 62 ஆயிரத்து 510 ஏக்கர் விவசாய நிலம் பாதித்துள்ளது. மேலும் தென்னை மரங்கள் அழிவினால் மட்டும்40 கோடி நஷ்டம்ஏற்பட்டுள்ளதாகமுதல்கட்டதகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த செய்தி