ஆப்நகரம்

கஜா புயல்: மீனவா்கள் 12ம் தேதிக்குள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தல்

கஜா புயல் காரணமாக ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் 12ம் தேதிக்குள் கரைக்குத் திரும்ப வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Samayam Tamil 11 Nov 2018, 1:23 pm
வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் வருகிற 15ம் தேதி கடலூா், ஸ்ரீஹாி கோட்டா இடையே கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.
Samayam Tamil Boats 123


வங்கக்கடலில் கஜா புயல் உருவாகியுள்ள நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் இன்று செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் பேசுகையில், கஜா புயல் வருகிற 15ம் தேதி கடலூா், ஸ்ரீஹாிகோட்டா இடையே கரையை கடக்கும். தற்போது சென்னை கிழக்கே 930 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.

புயல் காரணமாக வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. தீவிர புயலாக மாறினாலும் கரையை கடக்கும் போது புயலின் தீவிரம் குறையும். புயல் கரையை கடக்கும்போது வடகடலோர மாவட்டங்களில் 80-90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

புயல் காரணமாக நவம்பா் 12ம் தேதி முதல் மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றவா்கள் 12ம் தேதிக்குள் கரைக்கு திரும்பவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி