ஆப்நகரம்

கஜா புயல்: நாகை, கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்

கஜா புயல் கரையை கடக்கும்போது நாகை, கடலூா், தஞ்சாவூா், திருவாரூா் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்சமாக 100 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

Samayam Tamil 12 Nov 2018, 2:10 pm
கஜா புயல் நாகை, சென்னை இடையே வருகின்ற 15ம் தேதி முற்பகல் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.
Samayam Tamil Boats 123


வங்கக்கடலில் கஜா புயல் உருவாகியுள்ள நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பாலச்சந்திரன் இன்று செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில், கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்தில் இருந்து 840 கி.மீ. தொலைவில் உள்ளது. இது நவம்பா் 15ம் தேதி முற்பகல் சென்னை, நாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

புயல் கரையை கடக்கும் வரை தஞ்சாவூா், நாகப்பட்டினம், திருவாரூா், காரைக்கால், புதுச்சேரி, கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் காற்றின் வேகம் 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் இருக்கும். அதிகபட்சமாக 100 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது.

மேலும் இந்த பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவா்கள் 15ம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம். கனமழையை பொறுத்தவரை தஞ்சை, திருவாரூா், காரைக்கால், நாகப்பட்டினம், கடலூா், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாகப்பட்டினம், கடலூா், காரைக்கால் மாவட்டங்களில் இயல்பை காட்டிலும் கடல் அரை 1 மீட்டா் அளவுக்கு உயரக்கூடும். ரெட் அலா்ட் என்பதைப் பொறுத்தவரை அது பொதுமக்களுக்கானது அல்ல. முன்னேற்பாடுகள் செய்யவேண்டிய நிா்வாகத்துறையினருக்கானது என்று தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி