ஆப்நகரம்

Gaja Cyclone: வாழைகள் வீழ்ந்ததால் மனமுடைந்த விவசாயி தற்கொலை!

கஜா புயலின் தாக்குதலில் நூற்றுக்கணக்கான வாழைகள் வீழ்ந்ததால் மனமுடைந்த விவசாயி ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

Samayam Tamil 18 Nov 2018, 11:18 am
திருச்சி அருகே, கஜா புயலின் தாக்குதலில் நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் வேரோடு சாய்ந்ததால் மனமுடைந்த விவசாயி ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
Samayam Tamil ban
Gaja Cyclone: வாழைகள் வீழ்ந்ததால் மனமுடைந்த விவசாயி தற்கொலை!


திருச்சி மாவட்டம், மேலகொண்டையம் பேட்டையை சேர்ந்த விவசாயி செல்வராஜ். இவர் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2 லட்சம் கடன்வாங்கி, திம்மராயசத்திரத்தில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வாழை பயிரிட்டிருந்தார்.

இதனிடையே கஜா புயல் அறிவிப்பை தொடர்ந்து, காற்றில் வாழை மரங்கள் சாய்ந்துவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக கம்புகள் எல்லாம் கட்டி வைத்துள்ளார். ஆனால் மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் வீசிய பலத்த காற்றால் வாழை மரங்கள் அனைத்தும் கூண்டோடு சாய்ந்தன.

வாழை மரங்கள் குலை தள்ளி காணப்பட்ட நிலையில், கடனை அடைத்து விடலாம் என்று நம்பிய விவசாயி செல்வராஜ், கஜா புயலின் கோரத்தண்டவாத்தால் உருக்குலைந்து போனார். இதனால் விரக்தியடைந்த அவர், நேற்று காலை ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலத்தை கைப்பற்றிய ரயில்வே காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட விவசாயி செல்வராஜுக்கு சரண்யா என்ற மனைவியும் தனுஷிகா என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர். கஜா புயலின் கோரத்தாண்டவத்துக்கு வாழைகளை பறிகொடுத்த விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி