ஆப்நகரம்

சூதாட்டம்: நண்பரை கல்லைப் போட்டு கொன்ற பாசக்கார நண்பர்கள்!

வேலூரில் நண்பரை கல்லைப்போட்டு கொன்ற நண்பரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

TNN 12 Jul 2017, 6:30 pm
வேலூர் மாவட்டத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கட்டிடத் தொழிலாளியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil gambling friends killed friend using stone while gambling
சூதாட்டம்: நண்பரை கல்லைப் போட்டு கொன்ற பாசக்கார நண்பர்கள்!


வேலூர் மாவட்டம், காகிதப்பட்டறையை சேர்ந்தவர் பிரபாகரன். கட்டிடத் தொழிலாளி. சைதாப்பேட்டை மலையில் தனது நண்பர்களுடன் இணைந்து சீட்து ஆடிக் கொண்டிருந்தார். அப்போது நண்பர்களுக்கு இடையே பலத்த வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள் பிரபாகரன் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு, கத்தியால் குத்தி கொன்றுள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது மக்கள் கொடுத்த தகவலையடுத்து மாவட்ட கண்காணிப்பாளர் பகலவன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும், வேலூர் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி