ஆப்நகரம்

கும்பகோணத்தில் கான நர்த்தனம் நான்காம் ஆண்டு விழா

கும்பகோணத்தில் சபதஸ்வர கலை பண்பாட்டு அறக்கட்டளை நடத்தும் கான நர்த்தனம் நான்காம் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. கர்நாடக இசையில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற நந்தினி கவுரவிக்கப்பட்டார்.

Samayam Tamil 21 Apr 2019, 9:21 am
கும்பகோணத்தில் சபதஸ்வர கலை பண்பாட்டு அறக்கட்டளை நடத்தும் கான நர்த்தனம் நான்காம் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. கர்நாடக இசையில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற நந்தினி கவுரவிக்கப்பட்டார்.
Samayam Tamil barathanatyam


கும்பகோணத்தில் சப்தஸ்வர கலை பண்பாட்டு அறக்கட்டளை சார்பில் கான நார்த்தன கலைக்கூடம் சார்பில் நான்காம் ஆண்டு கலை நிகழ்ச்சி மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஜனரஞ்சனி ஹாலில் நடைபெற்றது.

கர்நாடக இசை நிகழ்ச்சியில் தாராசுரம் பகுதியை சேர்ந்த சங்கர் மகள் நந்தினி பரிசு பெற்றார். 2018-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நாமக்கலில் கலை பண்பாட்டுத்துறை தமிழக அரசு சார்பில் கலைத் திருவிழா நடைபெற்றது.

இவ்விழாவில் கும்பகோணத்திலிருந்து 30க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தமிழகம் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழக அரசு சார்பில் மாபெரும் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கர்நாடக இசையில் கும்பகோணத்தை சேர்ந்த நந்தினி தமிழகத்திலேயே முதலிடம் பெற்று பெருமை சேர்த்துள்ளார். தமிழக அரசு சார்பில் விரைவில் சிங்கப்பூர் மலேசியா கனடா ஆகிய நாடுகளில் கர்நாடக இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

நந்தினியை பாராட்டி பரதநாட்டியம் சான்றிதழ் வழங்கப்பட்டது. இவ்விழாவின் நந்தினி குருவான லயஸ்வர கலைமணி விவேகானந்தன் கலைவளர்மணி ராஜேஸ்வரி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் உறவினர்கள், பொதுமக்கள், நண்பர்கள், கர்நாடக இசை ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நந்தினி ஆறாம் வகுப்பு முதல் கர்நாடக இசையில் மிகவும் ஆர்வமாக இருந்து முதல் இடம் பெற்றதற்கு மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி