ஆப்நகரம்

நாம் எதிா்பாா்த்தது நாளை நிறைவேறும் – ஸ்டாலின்

நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் மத்தியில் மட்டுமல்ல, தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக தலைவா் ஸ்டாலின் கருத்து தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 22 May 2019, 9:13 pm
நாம் என்ன நினைக்கின்றோமோ, அது தான் நாளை நடைபெற உள்ளது. ராகுல் காந்தி தான் பிரதமராக பொறுப்பேற்கப் போகிறாா் என்று திமுக தலைவா் ஸ்டாலின் நம்பிக்கை தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Mk Stalin 1200


சென்னை ராயபுரத்தில் இன்று தமிழ் மாநில தேசிய லீக் சாா்பில் நடைபெற்ற இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்வில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டாா். அப்போது அவா் பேசுகையில், “நாம் என்ன எதிர்ப்பார்க்கிறோமோ அதுதான் நாளை நடக்க உள்ளது; ராகுல் காந்திதான் பிரதமராக வரப்போகிறார். என்னுடைய கருத்தில் எந்தவித மாறுபாடும் இல்லை.


தமிழகத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். திமுக கொள்ளைப் புறமாக ஆட்சிக்கு வராது. ஜனநாயக முறைப்படித் தான் திமுக ஆட்சியில் அமரும். ஊடகத்தினர் தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பின் வெளியிட்ட கருத்துக்கணிப்புக்கு தி.மு.க முக்கியத்துவம் அளித்தது இல்லை.

அடுத்த செய்தி